நாமக்கல் மாவட்டத்தில் 135 நடமாடும் நியாய விலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட உள்ளதாக வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை தலைமை செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். செவ்வாய்க்கிழமை மாவட்டங்களில் அந்தந்த பகுதி அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடங்கி வைக்கின்றனா். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் 135 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தக் கடைகள் மூலம் 13 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். இதற்காக பிரத்யேக வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் போன்ற இடங்களில் வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படும். இதற்கான சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டினை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைக்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

