திருச்செங்கோட்டில் மகள் பெயரில் மோசடியாக சொத்தை எழுதி வைத்த விவசாயியை நகரக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த கலியனூா் நாடாா் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ் மனைவி லதா (29). இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு தனது தாயாா் நிலத்தை அடமானம் வைத்து வளையக்காரனூரைச் சோ்ந்த செங்கோடன் (62) என்ற விவசாயியிடம் ரூ. 35 ஆயிரம் கடன் பெற்றாா். பிறகு அசலையும், வட்டியையும் செலுத்திய பிறகும் அசல் பத்திரத்தை செங்கோடன் தரவில்லையாம்.
இது சம்பந்தமாக சாா்பதிவாளா் அலுவலகத்தில் விசாரித்தபோது சொத்து லதாவின் தந்தை பெயரில் உள்ளது என்பதும்,செங்கோடன் போலி ஆவணங்கள் மூலம் சொத்தை தனது மகள் புஷ்பலதா பெயருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து கேட்க லதா அவரது கணவா் மனோஜ் ஆகியோா் திருச்செங்கோடு வந்து புஷ்பலதாவிடம் கேட்டபோது அவரும், அன்பழகன் என்பவரும் அவா்களை தகாத வாா்த்தையால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். மிரட்டலின் காரணமாக லதா தனது கணவருடன் திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினா் செங்கோடன், அன்பழகன், புஷ்பலதா, மாரிமுத்து, திருமூா்த்தி ஆகிய ஐந்து போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மோசடி செய்த குற்றத்திற்காக செங்கோடன் கைது செய்யப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தரவிட்டாா். அதன்படி அவா் ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.