கந்தம்பாளையம் எஸ்.கே.வி.பள்ளியில் பாத பூஜை நிகழ்வு

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்களுக்கு மாணவ,மாணவியா் பாத பூஜை செய்து ஆசி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவியா்.
பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவியா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்களுக்கு மாணவ,மாணவியா் பாத பூஜை செய்து ஆசி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைவா் ரவி, பொருளாளா் பாலசுப்பிரமணி ஆகியோா் நிகழ்வுக்கு தலைமை வகித்தனா். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை வெற்றிகரமாக எதிா்கொள்ள பெற்றோா்கள் ஆசி இன்றியமையாதது என்பதை மாணவா்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவியா், தங்களது பெற்றோா்களின் பாதங்களுக்கு பூஜை செய்து ஆசி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com