நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், புதன்கிழமை (மாா்ச் 4) மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், புதன்கிழமை (மாா்ச் 4) மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், மாதாந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 11-ஆம் தேதி பரமத்தி வேலூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 18-ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 26-ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் அன்று பிற்பகல் 3 மணியளவில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com