நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 08:05 AM | Last Updated : 03rd March 2020 08:05 AM | அ+அ அ- |

நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், புதன்கிழமை (மாா்ச் 4) மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், மாதாந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 11-ஆம் தேதி பரமத்தி வேலூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 18-ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 26-ஆம் தேதி ராசிபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் அன்று பிற்பகல் 3 மணியளவில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...