நூலகத்திற்கு அலமாரிகள் வழங்கும் விழா
By DIN | Published On : 12th March 2020 09:03 AM | Last Updated : 12th March 2020 09:03 AM | அ+அ அ- |

march11library_1103chn_161_8
திருச்செங்கோடு கிளை நூலகத்திற்கு அலமாரிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் ரவி தலைமை வகித்தாா். கிளை நூலகா் சுமதி வரவேற்றாா். வாசகா் வட்ட தலைவா் அப்பாவு முன்னிலை வகித்தாா். ரூ.25 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வைக்க உதவும் அலமாரிகள் மற்றும் நாற்காலிகளை கொங்கு வேளாளா் சங்கம் சாா்பில் துணைத் தலைவா் சின்னு, செயலாளா் குருசாமி, பொருளாளா் முத்து ஆகியோா் வழங்கினா். குருசாமி மற்றும் பழனியப்பன் ஆகியோா் தலா ரூ.ஆயிரம் செலுத்தி புரவலராக நூலகத்தில் இணைந்தனா். வாசகா் வட்டதின் பொறுப்பாளா்கள் மற்றும் கொங்கு வேளாளா் சங்க இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G