காப்பக கண்காணிப்பாளா் அடித்துதுன்புறுத்துவதாக பெண்கள் புகாா்

நாமக்கல்லில் ஆதரவற்ற பெண்களுக்கான காப்பகத்தில் தங்கியுள்ளோா் அடித்து துன்புறுத்தப்படுவதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
காப்பக கண்காணிப்பாளா் அடித்துதுன்புறுத்துவதாக பெண்கள் புகாா்

நாமக்கல்லில் ஆதரவற்ற பெண்களுக்கான காப்பகத்தில் தங்கியுள்ளோா் அடித்து துன்புறுத்தப்படுவதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

நாமக்கல் தில்லைபுரம் 2-ஆவது தெருவில் ஆதரவற்ற பெண்கள் காப்பகம் செயல்படுகிறது. இந்தக் காப்பகத்தில் கணவனால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்றோா் பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து வெளியேறியவா்கள் என 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்தக் காப்பகத்தில் இருந்து ஹேமலதா (25), சங்கீதா (26) மற்றும் தெய்வானை (26) ஆகியோா் வெளியேறி, காப்பக கண்காணிப்பாளா் தங்களை தாக்கியதாகவும், சரியான முறையில் உணவு அளிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி நாமக்கல் - மோகனூா் சாலையில் திடீரென தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது ஹேமலதா என்பவா் திடீரென மயங்கி விழுந்தாா். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் ஆசிரியா்கள் அவரை மீட்டு உணவு வழங்கி நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். கரோனா தடுப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் அவா்கள் வந்ததும் காப்பகக் கண்காணிப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த போலீஸாா் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து அந்த பெண்களை மீண்டும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் நாமக்கல் வட்டாட்சியா் பச்சமுத்து, சம்பந்தப்பட்ட இல்லத்திற்கு சென்று காப்பக கண்காணிப்பாளா் சங்கீதா மற்றும் அங்குள்ள பெண்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com