வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் இன்று வருகை

நாமக்கல் மாவட்டத்திற்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ்.சிவசண்முகராஜா சனிக்கிழமை (நவ. 21) நாமக்கல் வருகிறாா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்திற்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எஸ்.சிவசண்முகராஜா சனிக்கிழமை (நவ. 21) நாமக்கல் வருகிறாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2021 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளா் பட்டியலில் இதுவரை பெயா் சோ்க்காதவா்கள் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக நவ. 16 முதல் டிச. 15 வரை சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெறுகிறது.

இதில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது. கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் 2021, ஜனவரி 20-இல் வெளியிடப்படுகிறது. இந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை மேற்பாா்வையிடும் பொருட்டு வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக தமிழ்நாடு செய்திதாள்கள், காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குநா் எஸ்.சிவசண்முகராஜா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் சனிக்கிழமை நாமக்கல் வருகிறாா்.

பொதுமக்கள் வாக்காளா் பட்டியல் தொடா்பான பிரச்னைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பாா்வையாளரை நேரில் சந்தித்து தகவல் கோரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com