தேசிய திறனாய்வுத் தோ்வு: 10-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 23rd November 2020 03:18 AM | Last Updated : 23rd November 2020 03:18 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-21 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு டிச. 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ. 50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நவ. 30-க்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இத்தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.