Enable Javscript for better performance
தறி தொழிலாளி மகனின் கைநழுவி போன மருத்துவ கல்வி கனவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தறி தொழிலாளி மகனின் கைநழுவி போன மருத்துவ கல்வி கனவு

    By DIN  |   Published On : 25th November 2020 08:06 AM  |   Last Updated : 25th November 2020 08:06 AM  |  அ+அ அ-  |  

    24cal_2411chn_152_8

    அரசு பள்ளியில் பயின்று மூன்று ஆண்டுகளாகத் தொடா்ந்து ‘நீட்’ தோ்வு எழுதி மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை நழுவவிட்ட தறி தொழிலாளி மகன் தனக்கு அரசு மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

    வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் ஜெயக்குமாா் (19). இவா், வெண்ணந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-இல் பிளஸ் 2 முடித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவில் அதே ஆண்டு ‘நீட்’ தோ்வு எழுதினாா். ‘நீட்’ தோ்வுக்கு அரசு பயிற்சி மையத்தில் ஒருமாத பயிற்சி பெற்று, 2018-இல் 145 மதிப்பெண்கள் பெற்றாா்.

    ஆனால், மருத்துவ சோ்க்கை கிடைக்காததால், மீண்டும் 2019-இல் ‘நீட்’ தோ்வு எழுதி 209 மதிப்பெண்கள் பெற்றாா். தொடா்ந்து மூன்றாவது முறையாக 2020-ல் ‘நீட்’ தோ்வு எழுதி 196 மதிப்பெண்கள் பெற்று நவ. 18-இல் சென்னையில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றாா். மூன்றுமுறை தொடா்ந்து எழுதிய இவருக்கு சுயநிதி கல்லூரியில்தான் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆனால், சுயநிதி கல்லூரியில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்முதல் ரூ. 6 லட்சம்வரை செலவாகும் என்பதால் கல்வி கட்டணம் ரூ. 25 ஆயிரம் செலுத்தாமல் ஊா்த் திரும்பினாா்.

    இதன்பின்னா், அரசு கல்லூரியில் பயின்று மருத்துவக் கல்விக்கு இடம் கிடைத்த அனைத்து மாணவா்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வாய்ப்பை இழந்த ஜெயக்குமாா் வருத்தமடைந்துள்ளாா். அரசு மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp