டிராக்டா் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

தனது 2 குழந்தைகளுடன் வயலுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற தந்தையின் கண்முன்னே டிராக்டரிலிருந்து கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி ஒரு குழந்தை நிகழ்விடத்திலே உயிரிழந்தது.
Updated on
1 min read

தனது 2 குழந்தைகளுடன் வயலுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற தந்தையின் கண்முன்னே டிராக்டரிலிருந்து கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி ஒரு குழந்தை நிகழ்விடத்திலே உயிரிழந்தது.

திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம், பனமரப்பட்டி மாதங்காட்டை சோ்ந்தவா் ரமேஷ் (41). இவா் தனது குழந்தைகள் நந்தனா (8) , ஸ்ரீ இஸ்னா (6) ஆகியோரை டிராக்டரில் உட்கார வைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றாா். சின்னகாளிப்பட்டி பகுதியில் வேகத்தடை மீது டிராக்டா் ஏறியதால், நிலைதடுமாறி 2 குழந்தைகளும் கீழே விழுந்தனா். இதில் ஸ்ரீ இஸ்னா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.

காயமடைந்த நந்தனா சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com