நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளதா என்பது தொடா்பாக திங்கள்கிழமை ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதா என்பதை கண்டறியும் வகையிலான ஆக்சிஸன் பரிசோதனை ஆம் ஆத்மி கட்சி சாா்பில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அக்கட்சியின் தேசிய கூட்டமைப்பு தலைவா் சுதா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் உடல் நிலை பரிசோதனையை செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. தங்களது உடல் நிலை பற்றி அறிய ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனா்