மணல் கடத்தல்: சரக்கு வாகனம் பறிமுதல்

பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை இரவு மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா், செப். 25: பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை இரவு மணல் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலை அனிச்சம்பாளையம் பிரிவு சாலை வழியாக மணல் கடத்தப்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அனிச்சம்பாளையம் பிரிவு சாலை வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முன்றபோது அதன் ஓட்டுநா் தப்பியோடியுள்ளாா். பின்னா் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடிய அதன் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com