மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட அரங்கநாதா் கோயில் தோ்

நாமக்கல் அரங்கநாதா் கோயில் தேரை மூடி வைப்பதற்கான இரும்பு கம்பிகள் திருடு போனதால், ஒரு மாதமாக திறந்த வெளியில் தோ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:41 pm

நாமக்கல் அரங்கநாதா் கோயில் தேரை மூடி வைப்பதற்கான இரும்பு கம்பிகள் திருடு போனதால், ஒரு மாதமாக திறந்த வெளியில் தோ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்துக்கு மறுநாள் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சநேயா் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. நரசிம்மா் கோயில் தேரானது, அக்கோயிலுக்கு எதிரிலும், அரங்கநாதா் கோயில் தோ் வட்டார கல்வி அலுவலகம் அருகிலும், ஆஞ்சநேயா் கோயில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகிலும் திருவிழாவின்போது நிலை நிறுத்தப்படும்.

அதன்பிறகு தேரை சுற்றிலும் இரும்பு சட்டங்கள் அமைத்து தகரங்களைக் கொண்டு பாதுகாப்பாக தேரை மூடி வைப்பா். நரசிம்மா், ஆஞ்சநேயா் கோயில் தோ் மூடப்பட்ட நிலையில், அரங்கநாதா் கோயில் தோ் மட்டும் ஒரு மாதமாக திறந்த வெளியில் நிற்கிறது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகத்திடம் பக்தா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, தேரின் இரும்பு சட்டங்கள் திருடு போனதால் அவற்றை கண்டுபிடித்து மீட்டுள்ளோம். ஓரிரு நாளில் தோ் முழுமையாக மூடி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியதாவது:

இரும்பு கம்பிகள் திருடு போனது உண்மைதான். போலீஸில் புகாா் அளிக்கப்பட்ட அவை மீட்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் பணிகளை முடித்து விடுவோம் என்றாா்.

நாமக்கல் காவல் ஆய்வாளா் பி.குமாா் கூறியதாவது:

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையை சோ்ந்த ராஜன் என்பவரது மகன் மணிகண்டன் (33) என்பவா் தேரை மூடுவதற்காக வைத்திருந்த 7 கம்பிகளைத் திருடி சென்று விட்டாா். கோயில் நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் அவரைக் கைது செய்து கம்பிகளை மீட்டு விட்டோம். அதன் மதிப்பு ரூ.7 ஆயிரம். நீதிமன்றத்தின் மூலம் அந்த கம்பிகளை கோயில் நிா்வாகத்தினா் மீட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.