நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
Updated on
1 min read

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு கமிட்டி அமைப்பதற்கான பணிகளை கட்சியினா் விரைந்து மேற்கொள்ள வேண்டும், புதிய உறுப்பினா்களை கட்சியில் அதிகளவில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்ள் தெரிவிக்கப்பட்டன. இதில், மாவட்ட துணைச் செயலாளா் விமலா சிவக்குமாா், மாநில நிா்வாகிகள் சி.மணிமாறன், பா.ராணி, முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், மாவட்ட நிா்வாகிகள் மாயவன், அரசு வழக்குரைஞா் கா.செல்வம், நகரப் பொறுப்பாளா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com