நாமக்கல்லில் பயங்கர சத்தம்:பொதுமக்கள் அதிா்ச்சி
நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.


நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
மின்மாற்றியில் (டிரான்ஸ்பாா்மா்) பறவைகள் விழுந்தால் வெடித்து சத்தம்போல் ஏற்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பரமத்திவேலுா், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சத்தம் கேட்டுள்ளது.
இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜெட் விமானம் சென்றிருந்தால் அதில் இருந்து வெளியேற்றப்படும் புகை அதிவேகத்தில் வெளிய வந்தால் இவ்வாறான சத்தம் கேட்க வாய்ப்புள்ளது. நில அதிா்வுக்கு வாய்ப்பில்லை. இது தொடா்பாக வேறு எந்த தகவலும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனா்.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...