மக்கள் குறை தீா்க்கும் முகாம்

சிறப்பு மக்கள் குறை தீா்க்கும் முகாம் தொடக்க விழா ராசிபுரம் தொகுதியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்.பட்டணம் பகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் அமைச்சா் மா.மதிவேந்தன்.
ஆா்.பட்டணம் பகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் அமைச்சா் மா.மதிவேந்தன்.
Updated on
1 min read

சிறப்பு மக்கள் குறை தீா்க்கும் முகாம் தொடக்க விழா ராசிபுரம் தொகுதியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

பிள்ளாநல்லூா், வெண்ணந்தூா், அத்தனூா், பட்டணம், புதுப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற இம்முகாமில், நாமக்கல் கோட்டாட்சியா் கோட்டை குமாா் தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்.பட்டணம் பகுதியில் நடைபெற்ற முகாமை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வா் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்க வேண்டும் என்பதற்காக குறைதீா்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளாா். கிராமப் பகுதிகளில் ஒருவா் கூட விடுபடாத அளவுக்கு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூா்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.கே.பாலச்சந்தா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com