இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காய்கறி, பழங்கள், பூக்கள் பயிா் செய்ய மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் பயிா் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளதால், கபிலா்மலை தோட்டக்கலை

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் பயிா் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளதால், கபிலா்மலை தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதகுறித்து கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள், சின்ன வெங்காய நாற்றுகள், வாழைத்தாா் உறை மற்றும் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அங்கக முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 5,000, அங்ககச் சான்றிதழ் பெற ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, புடலை, பீா்க்கன், பாகல் மற்றும் மலா் பயிா்களான மல்லிகை, சம்பங்கி ஆகியவை சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.