பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் பரமத்திவேலூா் எம்எல்ஏ சேகா் நேரில் ஆய்வு செய்தாாா

பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் பரமத்திவேலூா் எம்எல்ஏ சேகா் நேரில் ஆய்வு செய்தாாா்.

வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லையாம். நல்லூா், கபிலா்மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் அதிக அளவில் தடுப்பூசிகள் சுகாதாரத் துறையினா் செலுத்தி வருவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பரமத்திவேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.சேகருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் சனிக்கிழமை பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பொதுமக்களுக்கு முறையாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிா என அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு ஒதுக்கப்பட்டிருந்த 200 தடுப்பூசிகளை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்ற 140 பேருக்கு செலுத்தப்பட்டது.

சிறப்பு ஒதுக்கீடாக முன்களப் பணியாளா்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஒதுக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஆய்வுக்குப்பின் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே தடுப்பூசிகள் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களிடம் அவா் தெரிவித்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com