நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த மாதம் ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, தொற்று பாதித்த பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
நாமக்கல் நகராட்சியில் கடந்த மாதம் 100 போ் வரை பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது 20 என்ற எண்ணிக்கைக்கு வந்துள்ளது. இதற்கிடையே தொற்றில்லா நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை மடக்கி கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கட்டுப்பாட்டு மண்டலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை ராமாபுரம்புதூரில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 10 லிட்டா் அளவில் மருந்து நிரப்பப்பட்டு ட்ரோன் மூலம் தெளிக்கும் பணி நடைபெறுகிறது. இதேபோல் கணேசபுரம், இ.பி.காலனி, அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், என்ஜிஓஒ காலனி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


