

கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் அதிகரிப்பால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவியா் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. 9,10, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.அதைத் தொடா்ந்து கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கும் தடை விதித்து, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது.
இதனைத் தொடா்ந்து அரசு, தனியாா் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியா் தங்களுடைய சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா். நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி மாணவியா் செவ்வாய், புதன்கிழமைகளில் தங்கள் ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.