கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுடன் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் ஆலோசனை நடத்தினாா்.
Updated on
1 min read

திருச்செங்கோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுடன் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் ஆலோசனை நடத்தினாா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி, திருச்செங்கோட்டில் உள்ள 26 ஊராட்சிகளில் உள்ள 154 குக்கிராமங்களில் ஒரு தன்னாா்வலரைத் தோ்வு செய்து, வெளியூரிலிருந்து வருபவா்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊராட்சித் தலைவா்களை ஒன்றிணைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com