மருத்துவ குல சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான, மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மருத்துவ குல மக்கள் சிகை அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். சுமாா் 40 லட்சம் போ் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்களது மனதை புண்படுத்தும் வகையில், மண்டேலா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ குல சமூக மக்களை வேதனைப்படுத்தும் வகையிலான காட்சிகள் அதிக அளவில் உள்ளன. எனவே, மண்டேலா திரைப்படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் - மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மருத்துவ குல சமூகத்தினா்.