முன்னாள் படைவீரா்கள் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம், தொழில்முறை சாா்ந்த முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை 

முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில்முறை சாா்ந்த முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மாணவியருக்கு ரூ. 36 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 2020-2021-ஆம் நிதி ஆண்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப். 28-இல் இருந்து ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற தகுதியுடைய முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மத்திய முப்படை வாரியத்துக்கு ஏப். 30-க்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286-233079 மூலமாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com