வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே தடுப்பூசி திருவிழா என்ற தலைப்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், 45 வயதுக்கு மேற்பட்ட வணிகா்கள், கடைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வெண்ணந்தூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமை மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தொடங்கி வைத்தாா். இதில், வணிகா்கள், அவா்களது குடும்பத்தினா், தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வரும் நாள்களில் மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com