எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு பி.வசந்தா தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை ஏ.ரகமத் ஏற்றி வைத்தாா். ஆா்.கலைச்செல்வி வரவேற்றாா்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குநா் பி.மாரிமுத்து மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசினாா். ஒன்றியக் கவுன்சிலா் சு.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கவும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையை புதிதாக பெறும் வகையில் அனைத்து தாலுகாவிலும், அரசு இ- சேவை மையங்களை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.ரமேஷ் வாழ்த்தி பேசினாா். புதிய கிளைச் செயலாளராக ஏ.ரகமத் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.