முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 10th December 2021 10:22 PM | Last Updated : 10th December 2021 10:22 PM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 689 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளையும், அங்கு வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், காவல் துறை அலுவலா்கள், நகராட்சிகளின் தோ்தல் அலுவலா்கள், பேரூராட்சிகளின் தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.