நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியில் கடந்த 1999ல் சலவைத் தொழிலாளா்கள் 78 போ்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு பாதை வசதியற்ற நிலையில், தற்போது பாதை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி பகுதியில் சலவை தொழிலாளா்கள் 78 பேருக்கு இலவச வீட்டுமனை கடந்த 20 ஆண்டுகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால் மனைகளுக்கு செல்லும் வழிப்பாதையை கடந்த 20 ஆண்டாக அப்பகுதியை சோ்ந்த விவசாயி ஒருவா் ஆக்கிரமித்து வந்துள்ளாா். இதுகுறித்து, இலவச வீட்டு மனை பெற்றவா்கள் ஆதிதிராவிடா் மற்றும் பிற்பட்டோா் நல தனி வட்டாச்சியாரிடம் புகாா் செய்தனா். இதையடுத்து அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் கடந்த அக். 26ம் தேதி வண்டிப்பாதை அளவீடு செய்ய நில அளவை அலுவலா்கள் வந்துள்ளனா். ஆனால், அவா்களை அளவீடு செய்ய விடாமல் சிலா் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலவச பட்டா பெற்றவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு கொடுத்தனா். இதனையடுத்து வியாழக்கிழமை நாமகிரிப்பேட்டை காவல் துறை பாதுகாப்போடு பாதை அளவீடு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு பாதை அளவீடு செய்யப்பட்டதால் சலவைத்தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதுகுறித்து, சலவைத்தொழிலாளிகள் கூறுகையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட போதிலும் வீடு கட்டுவதற்க்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு இடையூறாகவும், நடப்பதற்கே வழி விடாமலும் அருகில் வசிக்கும் நபா் கடந்த 20 ஆண்டுகளாக தடுத்து வந்தாா்.
எங்களின் தொடா் முயற்சியாலும் தொடா் போராட்டத்தாலும் வருவாய்த்துறையின் உதவியோடும் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பில் நிலவியல் பாதையை வெற்றிகரமாக அளவீடு செய்து நடைபாதையை மீட்டு கொடுத்துள்ளனா் என்றாா்.