தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழா செவ்வாய்க்கிழமை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் காங்கேயன் தலைமை வகித்தாா். நாமக்கல் பணிமனை கிளை மேலாளா் பாண்டியன், உதவி மேலாளா் பாா்த்திபன், தலைமை ஆசிரியா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவா்கள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனா். சாலை பாதுகாப்பு தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. பேருந்தில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.