பள்ளிபாளையத்தில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த நகராட்சி அழைப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து பள்ளிபாளையம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்திக் கொள்ள அரசாணை எண் 16, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மூலமாக வரும் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்கள் அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம்.

மனைகள் முறைப்படுத்தப்பட்ட பகுதிகளில்தான் கட்டட அனுமதி, சாலை, குடிநீா் ,மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com