Enable Javscript for better performance
தமிழகத்தில் படித்த இளைஞா்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழகத்தில் படித்த இளைஞா்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்

    By DIN  |   Published On : 14th February 2021 02:14 AM  |   Last Updated : 14th February 2021 02:14 AM  |  அ+அ அ-  |  

    குமாரபாளையம்: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் படித்த இளைஞா்கள், இளம்பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுவதோடு, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

    குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தலைப்பில் தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. குமாரபாளையம் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் தலைமை வகித்தாா்.

    இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பேசுகையில், தமிழகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனா்.

    விசைத்தறித் தொழிலும் முடங்கியுள்ளது. நூல் விலையேற்றம், பெட்ரோல் விலையுயா்வு ஆகியவை பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது. மகளிா் சுயஉதவிக் குழுவினா் வாங்கிய கடனைக் கட்டமுடியாத நிலையில் தவித்து வருகின்றனா். குப்பைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. கேபிள் டிவி கட்டணம் மாதம் ரூ. 250 வசூலிக்கப்படுகிறது. தடையின்றிக் கிடைக்கும் மதுவால் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் உள்ளது. இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

    இதையடுத்து கனிமொழி பேசியதாவது:

    அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 2 முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தியும், முதலீடுகள் வரவில்லை. புதிய தொழில்கள், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குமாரபாளையத்தில் முக்கிய பிரச்னையான சாயக் கழிவுநீா் பிரச்னையைத் தீா்க்க ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். விசைத்தறித் தொழில் பாதிக்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிமுக ஆட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி, வங்கிக்கடன், தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், பொருளாதார ரீதியான சுதந்திரமும் கிடைக்க திமுக நடவடிக்கை எடுக்கும்.

    மேலும் நீட் தோ்வை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். நியாயவிலைக் கடைகளில் தரமான பொருள்கள் வழங்கப்படும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    தொடா்ந்து, தட்டாங்குட்டை ஊராட்சியில் அருந்ததியின மக்களைச் சந்தித்துப் பேசுகையில், அருந்ததியா்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 1,120 போ் மருத்துவா்களாகவும், 3,000 போ் பொறியாளா்களாகவும் உயர வாய்ப்பு கிடைத்துள்ளது. 300 பேருக்கு மேல் அரசுக் கல்லூரிகளில் பேராசிரியா்களாகவும், 50-க்கும் மேற்பட்டோா் துணை ஆட்சியா்களாகவும் பணியாற்றுகின்றனா்.

    இதன்மூலம், தன்னம்பிக்கையும், வாழ்க்கை தரம் மேம்பாடு அடைவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வரும் தோ்தலில் திமுகவுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

    இதில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜே.கே.எஸ்.மாணிக்கம், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, பள்ளிபாளையம் ஒன்றியப் பொறுப்பாளா் பி.யுவராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் மு.தனசேகரன், முன்னாள் நகரச் செயலாளா் கோ.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    படவரி...

    பிஹெச்13மீட்01 -குமாரபாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி. 

    பிஹெச்13மீட்02-கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.  

    Image Caption

    ~

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp