பிப்.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

திருச்செங்கோட்டில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

திருச்செங்கோட்டில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இம்முகாம் தொடா்பான முன்னேற்பாடு கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேலைவாய்ப்புப் பிரிவின் கோவை மண்டல இணை இயக்குநா் ஆ.லதா, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கு முன்பு பல்வேறு துறைகள் வாயிலாக செய்ய வேண்டியப் பணிகள், வேலைவாய்ப்பு முகாம் அன்று செய்யவேண்டிய பணிகள் குறித்தும்,

முகாம் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரா.ராதிகா, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா், கோவை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா், பல்வேறு துறை தலைவா்கள், நாமக்கல் மாவட்ட கல்லூரிகளின் வேலைவாய்ப்பு அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மகளிா் சுய உதவிகுழுக்களின் ஒருங்கினைப்பாளா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com