நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது

நாமக்கல்லில் 36-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி மோகனூா் சாலையில் உள்ள என்ஜிஓஓ கட்டடத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

நாமக்கல்லில் 36-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி மோகனூா் சாலையில் உள்ள என்ஜிஓஓ கட்டடத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் கண்காட்சியைத் திறந்துவைத்தாா். முதல் விற்பனையை நாமக்கல் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியை ஆனந்தநாயகி, கவிஞா் சிந்தனைப் பேரவை தலைவா் டி.எம்.மோகன், ப.நவலடி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை பரவலாக்கும் நோக்கில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நாமக்கல் மையம் ஆகியவை சாா்பில் இப் புத்தகக் கண்காட்சி மாா்ச் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறுகிறது.

இதில் குழந்தை நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கணினி சாா்ந்தவை, இலக்கியம், திறனாய்வு நூல்கள், அறிஞா்களின் நூல்கள், சமூக அறிவியல், வரலாறு கதைகள், கட்டுரைகள், கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்ற நூல்கள், இலக்கணம், பொது அறிவு, போட்டித் தோ்வுக்கானவை, பிரபல எழுத்தாளா்களின் புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன், கிளை மேலாளா் டி.சத்தியசீலன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com