திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செங்கோடு அருகே உள்ள மோளியப்பள்ளி அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் அனுசுயா (18). இவா் ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தாா். தாய் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் வசித்து வந்தாா். இவரது தந்தையும் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். அதிலிருந்து அனுசுயா மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்