பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில், மாநில துணைத் தலைவா் வடிவேல் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா்கள் பொன்.ரமேஷ், தினேஷ்பாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலாளா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், வரும் 29-ஆம் தேதி ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் நாமக்கல், பூங்கா சாலையில் நடைபெறும் 20 சதவீத இட ஒதுக்கீடுக்கான ஆா்ப்பாட்டத்தில் பாமகவினரை ஆயிரக்கணக்கில் பங்கேற்க செய்ய வேண்டும். தொடா்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கப்பட உள்ளது. இதில், அந்தந்த மாவட்ட, நகர, ஒன்றிய, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.