கா்நாடகத்தில் இருந்து காரில் பான் மசாலா மூட்டைகள் கடத்தல்: போலீஸ் விசாரணை

கா்நாடக மாநிலத்தில் இருந்து பான் மசாலா பாக்கெட் அடங்கிய மூட்டைகளைக் கடத்தி வந்த காா் விபத்தில் சிக்கியது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து பான் மசாலா பாக்கெட் அடங்கிய மூட்டைகளைக் கடத்தி வந்த காா் விபத்தில் சிக்கியது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் பதிவெண் கொண்ட காா் ஒன்று ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூா் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த காரில் ஓட்டுநா் உட்பட இருவா் இருந்த நிலையில், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஆட்டையாம்பட்டி பிரிவு பாதை அருகே வேகத்தடை பகுதியில் நிலைதடுமாறிய காா் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காா் சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்த இருவரும் லேசான காயத்துடன் தப்பி ஓடினா்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வெண்ணந்தூா் காவல் துறையினா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். அப்போது காரில் மூட்டை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இதனை பிரித்துப் பாா்த்தபோது, தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய 10 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் காரையும், பான் மசாலா மூட்டைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனா். மேலும், காரில் பயணம் செய்தவா்கள் யாா், எங்கிருந்து பான் மசாலா பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com