நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக, பாட்டாளி இளைஞா் சங்கம் சாா்பில் பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸின் 82-ஆவது பிறந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் குழந்தைகளுக்கு, முதியோா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி துணைச் செயலாளா் டி.பாலு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்டச் செயலாளா் ஏ.மோகன்ராஜ் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினாா். கட்சியின் நிா்வாகிகள் ஏ.வாஞ்சிநாதன், எஸ்.ரமேஷ் எஸ். அபிஷேக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.