நாமக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு முதலமைச்சா் காப்பீட்டு திட்டம் தனியாா் மருத்துவமனைகளில் முறையாக செயல்படுத்தப்படுவது குறித்து மருத்துவப் நலப்பணிகள் இணை இயக்குநா் பி.கே.சித்ரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 23 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் தமிழக அரசின் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் பி.கே.சித்ரா நேரில் ஆய்வு செய்தாா் (படம்). பின்னா் அவா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 23 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் தமிழக அரசின் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
கரோனா சிகிச்சைக்கு செல்லும்போது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை பெறுவதில் சிரமம் இருந்தாலோ அல்லது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரிந்தாலோ உடனடியாக 1800 425 3993 மற்றும் 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அரசு அனுமதி பெறாமல் சில ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்து வருகின்றன. அனுமதி பெறாமல் எடுக்கும் பரிசோதனை மையங்கள் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் செயல்படுவதால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, விதிகளை மீறி செயல்படும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
படம் உள்ளது : என்கே04மரு