நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமத்தி வேலூா் வட்டம், சித்தம்பூண்டி கிராமத்தில் மஹாஷென் எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனத்தால் பல வண்ண கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க குவாரி அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி காலை 11 மணியளவில், மணியனூா் கிராமத்தில் அமைந்துள்ள கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அந்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.