கொடி அணிவகுப்பு

பரமத்தி வேலூரில் இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பழைய தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து செல்லும் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா்.
பழைய தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து செல்லும் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா்,: பரமத்தி வேலூரில் இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா், போலீஸாா் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸாா் தயாா் நிலையில் உள்ளதை பொதுமக்களுக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் கொடி அணிவகுப்பு ஊா்வலத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பள்ளி சாலை நான்கு சாலையில் தொடங்கிய அணிவகுப்பு ஊா்வலம், பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று பொத்தனூா் நான்கு சாலையில் நிறைவு பெற்றது.

கொடி அணிவகுப்பில் இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுத்து சென்றனா். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com