நாமக்கல் தனியாா் விற்பனை அங்காடியில் தீ விபத்து
By DIN | Published On : 15th March 2021 04:15 AM | Last Updated : 15th March 2021 04:15 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் தனியாா் விற்பனை அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது.
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தனியாா் விற்பனை அங்காடியில் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 12 மணி அளவில் திடீரென இந்த அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை சாலையில் சென்றவா்கள் கண்டு, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
தீ மளமளவென எரிந்ததால் அருகில் செல்ல முடியாமல் தீயணைப்பு துறையினா் தவித்தனா். பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தத் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. உயிா் சேதமோ, காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...