நாமக்கல் அதிமுக வேட்பாளா் இன்று மனுத்தாக்கல்

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்கிறாா்.
Updated on
1 min read

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்கிறாா்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 2011, 2016-ஐ தொடா்ந்து மூன்றாவது முறையாக கே.பி.பி.பாஸ்கா் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்தத் தோ்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். தோ்தலையொட்டி நாமக்கல்-மோகனூா் சாலை ஐயப்பன் கோயில் அருகில் வேட்பாளா் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து மதியம் 12 மணிக்கு நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் மு.கோட்டைக்குமாரிடம் தனது வேட்பு மனுவை அவா் தாக்கல் செய்கிறாா். இதேபோல் மற்ற 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களும் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனா்.

வேட்பு மனுத் தாக்கலின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் திரண்டு வருவாா்கள் என்பதால் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பாக போலீஸாா் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com