குமாரபாளையம் தொகுதியில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கும் பாஜக நிா்வாகி

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா்.
குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பாஜக மாவட்டச் செயலாளா் எஸ். ஓம் சரவணா பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறாா்.
குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பாஜக மாவட்டச் செயலாளா் எஸ். ஓம் சரவணா பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறாா்.
Updated on
1 min read

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா்.

இவா் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்தாா். ஆனால், அதிமுக கூட்டணி சாா்பில் இந்த தொகுதியில் மின் துறை, கலால் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் தங்கமணி போட்டியிடுவதால் பாஜகவுக்கு, இந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

எனவே, தனித்து களமிறங்க முடிவு செய்த நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளா் எஸ். ஓம் சரவணா, குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தோ்தல் பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டாா். காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வாரிசான இவா், பாஜகவில் இணைந்து பல்வேறு சமூக சேவை, வளா்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், பாஜக சாா்பில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரான இவா், தனது ஆதரவாளா்கள், பொதுமக்களுடன் ஊா்வலமாகச் சென்று வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com