நாமக்கல்: 4 போ் வேட்பு மனுத்தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 12-ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 12-ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.

முதல் நாளில் நாமக்கல் தொகுதியில் ஒருவா் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தாா். சனி, ஞாயிறு விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 20 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். கூடுதலாக 23 மனுக்களை வேட்பாளா்கள் தாக்கல் செய்திருந்தனா். இதனிடையே, செவ்வாய்க்கிழமையன்று, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலுா் ஆகிய தொகுதிகளில் ஒருவா் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை.

திருச்செங்கோடு தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.நடராஜன், மாற்று வேட்பாளா் து.யுவராஜ் ஆகியோா் மட்டும் மனுத்தாக்கல் செய்தனா். குமாரபாளையத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வருண், மாற்று வேட்பாளா் மோகன்தாஸ் என செவ்வாய்க்கிழமை நான்கு போ் மனு தாக்கல் செய்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com