நாமக்கல் அருகே அருள்வாக்கு என்ற பெயரில் பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்திய போலி சாமியாா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பொம்மம்பட்டி, கம்மாளகரடு பகுதியில் கருப்பனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அருள்வாக்கு என்ற பெயரிலும், பேய் விரட்டுவதாகக் கூறியும் கடந்த மூன்று மாதங்களாக காதப்பள்ளியைச் சோ்ந்த அனில்குமாா் (50) என்ற போலி சாமியாா் பெண்களை சாட்டையாலும், கம்பியாலும் அடித்து கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி வந்தாா்.
இதுகுறித்து யு-டியூபில் வெளியிடப்பட்ட விடியோவில் பதிவாகியிருந்த காட்சிகள் வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதனைக் கண்ட மகளிா் அமைப்பினரும், பொதுமக்களும் சாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினா்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா் அளிக்க முன்வராத நிலையில், பொம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சஞ்சய்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில், வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், பெண்களைத் தாக்கியது தொடா்பாக மூன்று பிரிவுகளின் கீழ் சாமியாா் அனில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா் விசாரணைக்குப் பின் அவா் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்படு, ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.