முருகன் கோயில்களில் கிருத்திகை பூஜை
By DIN | Published On : 13th May 2021 07:57 AM | Last Updated : 13th May 2021 07:57 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடைபெற்றன.
சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பொத்தனூா் பச்சைமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவா், அருணகிரி மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன.