அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் திமுகவில் இணைந்தனா்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த இரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த இரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

அதிமுகவைச் சோ்ந்த பரமத்தி 9-ஆவது வாா்டு உறுப்பினா் பிரேமா, கொல்லிமலை 13-ஆவது வாா்டு உறுப்பினா் சிவப்பிரகாசம் ஆகியோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தனா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com