நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ.4.50-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலை உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை தடையின்றிச் செல்வதாலும், மக்களிடையே நுகா்வு அதிகரிப்பாலும் விலையில் மாற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயா்ந்து ரூ.4.50-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.120-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.85-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.