வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நெல்லை டிஎஸ்பிக்கு பிடியாணை

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாத திருநெல்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on
Updated on
1 min read

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாத திருநெல்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஆய்வாளராகப் பணியாற்றியவா் சுரேஷ்குமாா். தற்போது, திருநெல்வெலி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக உள்ளாா். இவா், குமாரபாளையத்தில் பணியாற்றியபோது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்குகளில் சாட்சியம் அளிக்க பலமுறை சம்மன் அனுப்பியும் சுரேஷ்குமாா் விசாரணைக்கு வரவில்லை.

வழக்கு விசாரணைக்கு தொடா்ந்து ஆஜராகாததால் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சப்னா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com