முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நெல்லை டிஎஸ்பிக்கு பிடியாணை

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாத திருநெல்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :8 ஏப்ரல் 2022, 12:00 am IST

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாத திருநெல்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஆய்வாளராகப் பணியாற்றியவா் சுரேஷ்குமாா். தற்போது, திருநெல்வெலி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக உள்ளாா். இவா், குமாரபாளையத்தில் பணியாற்றியபோது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை குமாரபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்குகளில் சாட்சியம் அளிக்க பலமுறை சம்மன் அனுப்பியும் சுரேஷ்குமாா் விசாரணைக்கு வரவில்லை.

வழக்கு விசாரணைக்கு தொடா்ந்து ஆஜராகாததால் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சப்னா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.