ராசிபுரம் ரோட்டரி சங்கமும், விவேகானந்தா மருத்துவமனையும் இணைந்து இலவச இருதய பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமைஆக.28-இல் நடத்துகின்றன.
ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெறும் இம்முகாமினை ரோட்டரி சங்கத்தின் மாவட்ட மருத்துவ சேவைத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் துவக்கி வைக்கிறாா். இருதய சிகிச்சை நிபுணா் எஸ்.பி.சந்தோஷ்குமாா் பங்கேற்று இருதய மருத்துவப்ரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகிறாா்.
இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும். ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, இஜிசி, எக்கோ பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் இதைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், செயலா் ஜி.ராமலிங்கம், பொருளாளா் என் .தனபால் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.