நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் 50-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் நினைவு தினம் அனுசரிப்பு
Updated on
1 min read

நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் 50-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்ட தியாகியும், தனது கவிதைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையை வளா்த்தவருமான காந்தியக் கவிஞா் என்றழைக்கப்படும் நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் தனது 84-ஆவது வயதில், கடந்த 1972 ஆக.24-இல் காலமானாா். அவருடைய 50-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் அண்ணாசிலை அருகில், கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சாா்பில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, சிறப்பு ஆலோசகா் மா.தில்லை சிவகுமாா், அறக்கட்டளையின் தலைவா் எஸ்.சுரேஷ், செயலாளா் ஏ.சரவணன், துணைத் தலைவா் எஸ்.சக்திவேல், பொருளாளா் ஜெ.கதிா் மற்றும் ஆா்.ஆனந்த், ஆா்.கண்ணன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல், நாமக்கல் கவிஞா் நினைவு இல்ல நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாசகா் வட்டத் தலைவா் டி.எம்.மோகன் தலைமை வகித்தாா். கவிஞரின் பேரன்கள் அனுமந்தன்பாண்டியன், அமிா்தலிங்கம்பழனியப்பன் மற்றும் கவிஞரின் உதவியாளரான சிவராமன், மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா். கவிஞா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழா நிறைவில் நூலகா் செல்வம் நன்றி தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து நாமக்கல் கவிஞா் படித்த நம்மாழ்வாா் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிவபாக்கியம் முதியோா் இல்லத்தில் உள்ளோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடா்புத் துறை, நூலக வாசகா் வட்டம், கவிஞா் சிந்தனைப் பேரவையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com